இணையவழி போதைப்பொருள் வர்த்தகம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!
#SriLanka
#Arrest
#Police
#drugs
PriyaRam
1 year ago

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக, போதைப்பொருள் வர்த்தகர்கள் இணையம் மற்றும் தொலைபேசியினை அதிகளவில் பயன்படுத்துவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.



