கொழும்பில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி :பொதுமக்களுக்கு அழைப்பு!
#SriLanka
#Colombo
#Sajith Premadasa
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
"மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டு" என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை கொழும்பில் ஆரம்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இன்று (30.01) கொழும்பில் பாரிய பேரணியொன்று நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மக்கள் படை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பேரணியில் கட்சியின் அனைத்து தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.