இரவு நேர தபால் நிலையங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#lanka4Media
#lanka4news
#lanka4.com
PriyaRam
1 year ago
ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக இலங்கை தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அதற்கமைய ஜனவரி மாத இறுதிக்குள் உரிய வசதிகள் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது மேல்மாகாணத்தில் இரவு நேர தபால் சேவைகள் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.