இம்ரான்கானின் வேட்பு மனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் நிராகரிப்பு

#Election #Arrest #Prison #Pakistan #ImranKhan #Election Commission #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
இம்ரான்கானின் வேட்பு மனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் நிராகரிப்பு

பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இம்ரான்கானின் வேட்பு மனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துள்ளது. லாகூரில் இருந்து நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, 

ஏனெனில் அவர் அந்தத் தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் அல்ல என்பதாலும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் எனவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 2018 முதல் 2022 வரை பதவியில் இருக்கும்போது அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமினில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4