ஜனவரியில் அமுல்படுத்தப்படவுள்ள முக்கிய சட்டம்!
சிவில் சமூக அமைப்புகள் மூன்று மாத கால ஆலோசனை செயல்முறையை வலியுறுத்தினாலும், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை ஜனவரி 23 ஆம் திகதி முதல் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிகழ்நிலை பாதுகாப்பிற்காக இதுபோன்ற சட்டங்களை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், சிவில் சமூக இயக்கங்கள் சட்டமூலத்தில் இணைக்கப்பட வேண்டிய தொழில்துறை பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற மூன்று மாத ஆலோசனை செயல்முறையை நாடியது.
சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்க சிங்கப்பூர் சென்றது. இந்த சட்டமூலம் சிங்கப்பூரின் நிகழ்நிலை பொய்மை மற்றும் கையாளுதல் சட்டத்திலிருந்து (POFMA) பரவலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்தில் இந்த சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அஷு மாரசிங்க உறுதிப்படுத்தினார்.
கூகுள் மற்றும் முகப்புத்தகம் போன்ற தொழில்துறை பங்குதாரர்களின் உள்ளீடுகளை இந்த சட்டமூலத்தின் இறுதிச் சட்டத்தில் இணைப்பதற்கு அமைச்சகம் காத்திருக்கிறது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கூறினார்.