தமிழ்த்தேசிய கட்சிகளுடனான சந்திப்பிற்கு மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்காத ரணில்!
#SriLanka
#Ranil wickremesinghe
PriyaRam
1 year ago
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று இடம்பெறவுள்ள சந்திப்புக்கான எவ்வித அழைப்பும் தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனைத் தெரிவித்தார்.

அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும், குறித்த சந்திப்பை புறக்கணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எனும் ஜனாதிபதியின் கொள்கையை கைவிட்டால் மாத்திரமே, தமது கட்சி அரசியல் தீர்வு தொடர்பான ஜனாதிபதியின் கலந்துரையாடலில் பங்கேற்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.