யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 03 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று (26.11) நோயாளர் காவு வண்டியுடன், மேலும் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி, நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது.
குறித்த விபத்தினால் உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.