ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள்!

#SriLanka #NorthernProvince #Mannar
PriyaRam
2 years ago
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள்!

தமிழ் மக்களின் உரிமைப் போரின் போது தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்களால் நினைவு கூரப்படவுள்ளது.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணி குழுவினரால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

images/content-image/2023/10/1699082087.jpg

மாவீரர் நெடுங்கீரனின் தந்தை வீரசிங்கம் தலைமையில் குறித்த சிரமதான பணி இடம் பெற்ற நிலையில் சிரமதானத்தின் பின்னர் முதல் பெண் போராளி இரண்டாம் லெப் மாலதியின் சகோதரன் தொம்மை பொது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் தந்தை ராசாவினால் மலர் வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த ஆரம்ப நாள் நிகழ்வு மற்றும் சிரமதான பணியில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், துயிலும் இல்ல பணி குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!