ஆரம்பமானது வேலை நிறுத்தப் போராட்டம்!
#SriLanka
#Protest
#Hospital
#doctor
PriyaRam
2 years ago
நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை முதல் அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு நடத்தப்படவுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி ஊவா மாகாணத்தில் இன்று காலை முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, சம்பளப் பிரச்சினை, அரச பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி வெட்டு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.