'கண்ஜுன்க்டிவிடிஸ்' நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கொழும்பு மாநகர சபையின் சுகாதாரத் திணைக்களம், கொழும்பு நகர எல்லையிலுள்ள பாடசாலைகளில் பொதுவாக பிங்க் ஐ என அழைக்கப்படும் 'கண்ஜுன்க்டிவிடிஸ்' என்ற கண் நோய் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் நோய் பரவல் காரணமாக கொழும்பில் உள்ள பல பாடசாலைகளில் பல தரங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நோய் பரவல் காரணமாக கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின் மூன்று தரங்களில் உள்ள வகுப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் தொற்று கண் நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, 6, 7 மற்றும் 8 ஆம் தரங்களுக்கான வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மேற்கு, கொழும்பு மத்திய, கொழும்பு வடக்கு மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் இந்த கண் நோய் வேகமாக பரவி வருவதாக கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்த நோய் ஆபத்தானது அல்ல என்று டாக்டர் விஜேமுனி உறுதியளித்ததோடு, பீதி அடைய வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் சிவத்தல், அரிப்பு, அதிகப்படியான கண்ணீர், தலைவலி, ஒளியின் உணர்திறன் மற்றும் வறண்ட கண்கள் ஆகியவை நோயின் அறிகுறிகளாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
ஐந்து நாட்களுக்கும் மேலாக குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பெற்றோர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.



