இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெற வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எடுத்துள்ள நடவடிக்கை!

தற்போது, இஸ்ரேலில் நிலவும் மோதல் சூழ்நிலையில், அந் நாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி 94716640560 என்ற இலக்கத்தின் ஊடாகவோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 1989 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ வாட்ஸ்அப் ஊடாக உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது, சுமார் எட்டாயிரம் இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர், அவர்களில் தொண்ணூறு வீதமானோர் தாதியர் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு அங்குள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்ததோடு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார்.



