சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் உள்ள சூதாட்ட அமைப்பு பற்றிய அறிக்கை கோரிய ஹர்ஷ டி சில்வா

#SriLanka #government #Harsha de Silva #economy
Prathees
1 year ago
சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் உள்ள சூதாட்ட அமைப்பு பற்றிய அறிக்கை கோரிய ஹர்ஷ டி சில்வா

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், பல பொருட்களின் மீதான வரிகளை குறைக்க அரசாங்கத்தின் நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 இலங்கையில் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது தொடர்பாக, சிங்கப்பூரில் தற்போதுள்ள அமைப்பு மற்றும் இலங்கையில் உருவாக்க எதிர்பார்க்கப்படும் மாதிரி குறித்து ஒப்பீட்டு அறிக்கையை வழங்குமாறு குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

 தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், ஒப்பந்தம் பற்றிய தர்க்கரீதியான உண்மைகளை முன்வைத்து 06 வாரங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பொறுப்பான தலைமை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

 இதற்கிடையில், சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவது தொடர்பான செயல்பாட்டின் தற்போதைய நிலை குறித்து குழு விவாதித்தது. சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள முறைகள் குறித்து இலங்கையில் உள்ள பல நிறுவனங்களுடன் கலந்துரையாடி ஒரு வரைவைத் தயாரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 எவ்வாறாயினும், இறுதிச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு முன்னர் வரைவை அரசாங்க நிதி தொடர்பான குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 இதன்படி, சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள அமைப்பு மற்றும் இலங்கையில் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது தொடர்பாக உருவாக்க எதிர்பார்க்கப்படும் மாதிரி குறித்து இரண்டு வாரங்களுக்குள் ஒப்பீட்டு அறிக்கையை வழங்குமாறு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!