மீண்டும் மின் கட்டண உயர்வு மின்சார சபையின் திறமையின்மையையே காட்டுகிறது

#SriLanka #prices #Lanka4 #Power station #power cuts #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
மீண்டும் மின் கட்டண உயர்வு மின்சார சபையின் திறமையின்மையையே காட்டுகிறது

மீண்டும் மின் கட்டண உயர்வு மின்சார சபையின் திறமையின்மையையே காட்டுகிறது என மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் எம்.டி. ஆர்.அதுல தன்னிச்சையாக மின்கட்டணத்தை உயர்த்துவதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் எனத் தெரிவித்திருந்தார்.

 கனமழை காரணமாக அதிக நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 நீர் மின்சாரம் மற்றும் எரிபொருளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சரியான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதும் அவர் கருத்து. அவ்வாறு இல்லாமல் மின்கட்டணத்தை உயர்த்தும் இந்த செயல் மிகவும் கேலிக்கூத்தானது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4