பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை -சஜித் பிரேமதாச

#SriLanka #Sajith Premadasa #Ali Sabri #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
10 months ago
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை -சஜித் பிரேமதாச

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

 எவ்வாறாயினும், அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், அந்த குழுக்களின் பிரதிநிதியாக எம்.பி.க்கு சிக்கல் உள்ளது, எனவே விசாரணை முடியும் வரை அவர் அனைத்து குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைத்தார்.

 4.611 கிலோ தங்கத்தை (80 மில்லியன் பெறுமதி) கொண்டு வந்த நபருக்கு 70 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதனை செலுத்த முடியாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும்,740 இலட்சம் பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வந்த போது பிடிபட்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு 7.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அனைவரையும் அவமானப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும்,நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றவும் தாம் பிரேரணையை தயாரிக்க தயார் என்றும் தெரிவித்திருந்தார். நாட்டின் குடிமகனுக்கு ஒரு கவனிப்பும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு மற்றொரு கவனிப்பும் நடைமுறைப்படுத்துவது முறை மாற்றமா என கேள்வி எழுப்பிய அவர், இதற்கு என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.