தனியார் பேருந்துகளில் ஏற்படும் தவறுகள் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்
#SriLanka
#Bus
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
மேல்மாகாணத்தில் தனியார் பேருந்துகளில் ஏற்படும் தவறுகள் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (18) மேற்கு வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தலைமையில் குறித்த தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பேரூந்துகளில் ஏற்படும் தவறுகள் தொடர்பில் பயணிகள் 0112 860860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.