பிரேசிலில் இருந்து அனுப்பப்பட்ட பார்சலில் 2.5 கிலோ கொக்கெய்ன்

பிரேசிலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 2.5 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருள் இருந்ததை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் சந்தைப் பெறுமதி சுமார் 190 மில்லியன் ரூபா என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
வாலிபால் வலையின் ஓரத்தில் உள்ள ஒரு குழாயில் போதைப்பொருள் பதுக்கி கவனமாக மறைத்து வைக்கப்பட்டது.
குறித்த பொதியை அகற்றுவதற்காக அங்கிருந்த அதிகாரம் பெற்ற அதிகாரி ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பார்சல் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கையிருப்பு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.



