வனப்பகுதியில் காணாமல் போன தம்பதியை மீட்ட பொலிசார்

#SriLanka #Police
Prathees
1 year ago
வனப்பகுதியில் காணாமல் போன தம்பதியை மீட்ட பொலிசார்

ஹல்துமுல்ல பம்பரகந்த யால சமவெளி நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் இரண்டு நாட்களாக வனப்பகுதியில் காணாமல் போன தம்பதியினர் நேற்று (11) மாலை பொலிஸ் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்டுப்பகுதிக்கு சென்று அவர்களை கண்டுபிடித்து பத்திரமாக மீட்டுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

 கருவலகஸ்வெவ,நெலும்வெவ நவோத்யா மதுரங்க (வயது 24) மற்றும் தம்புத்தேகம செவ்வந்தி சந்தீபனி (வயது 23) என்ற புதுமண தம்பதியரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

 தொலைந்து போன நவோத்யா தனது அனுபவத்தை பின்வருமாறு விவரித்தார்.

 “செப்டம்பர் 8ம் தேதி வீட்டிலிருந்து வந்தோம்.. கல்யாணமாகி 3 மாதங்கள் ஆகிறது. நாங்கள் வந்து பம்பரகந்த வாங்கெடிகலவுக்கு அருகில் கூடாரம் அடித்துக் தங்கினோம். 

இடையில் இடம் விட்டு இடம் பெயர்ந்தோம். இதற்கிடையில் நாங்கள் காட்டில் தொலைந்து போனோம். 

 காட்டுக்குள் எந்த வழியில் செல்வது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் இருந்த இடம் சிறிய தாய்க்கு அனுப்பினோம். 

அதன்பின் செல்போன் பேட்டரி சார்ஜ் இறங்கிவிட்டது. பின்னர் அந்த லோகேக்ஷத்தை சிறிய தாயார் பொலிஸாருக்கு அனுப்பி வைத்ததால் ஹல்துமுல்ல பொலிஸார் அதனைப் பயன்படுத்தி எமது இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.

 நாங்கள் இரவை இருளில் கழித்தோம், காட்டு விலங்குகளால் பாதிக்கப்படவில்லை.

 எங்களைக் காப்பாற்றிய ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி மற்றும் அந்த அதிகாரிகள் அனைவருக்கும் நாங்கள் மிகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அசங்க சுரவீர தலைமையிலான அதிகாரிகள் குழு தம்பதியை மீட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!