இலங்கை உடனான உறவுகளை துண்டிக்க வேண்டும் - தமிழ் ஏதிலிகள் பேரவை வேண்டுகோள்!

இலங்கை அரசாங்கத்துடனான அனைத்து பாதுகாப்பு உறவுகளையும் அவுஸ்ரேலிய அரசாங்கம் துண்டிக்க வேண்டும் என தமிழ் ஏதிலிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அந்த பேரவை வெளியிட்டுள்ள செய்தியில், “இனப்படுகொலை மூலமே ராஜபக்சாக்கள் தாங்கள் வலிமையானர்வர்கள் என்ற அபிப்பிராயத்தை உருவாக்கினார்கள் இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவு காணப்பட்டது.
பத்து வருடங்களிற்கு பின்னர் மதவெறியை தூண்டும் அரசாங்கத்தின் இலக்கிற்கு தமிழ் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்கள் பலியானார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய வெற்றிபெற்றதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளவர்களை இடம்மாற்றி விசாரணைகளை குழப்பினார் என சனல் 4 இன் ஆவணப்படத்தில்உண்மைகளை வெளிப்படுத்திய மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவமயப்படுத்தப்பட்ட தேசம் என்பது வெறுமனே ராஜபக்சாக்களின் உருவாக்கம்இல்லை. அது சிங்கள பேரினவாதத்தின் வளர்ச்சியாக உருவாக்கப்பட்டது.
1948 முதல் தமிழர்களும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களும் அதிகளவு புறக்கணிக்கப்பட்டு பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த புதிய ஆதாரங்கள் இலங்கை சிறுபான்மையினத்தவர்களிற்கு பாதுகாப்பான நாடாக மாறவில்லைஎன்பதை வெளிப்படுத்துகின்றது.
இலங்கை அரசாங்கத்துடனான அனைத்து இராணுவ பாதுகாப்பு உறவுகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் துண்டிக்கவேண்டும் என தமிழ் ஏதிலிகள் பேரவை அவுஸ்திரேலிய அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.



