குறைந்த சம்பளத்திற்கு தேயிலைக் கொழுந்து பறிக்கும் 83 வயதான முதியவர்! தொடரும் மலையக அவலம்
#SriLanka
#Sri Lanka President
#government
#Tea
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
1 year ago

மலையகத்தில் 83 வயதுடைய பாட்டி ஒருவர் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
பெற்ற பிள்ளைகள் புறக்கணித்ததன் காரணமாக தான் கூலிக்காக தேயிலைக்கு கொழுந்துகளை பறிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவருக்கு மாத சம்பளமாக 3500 ரூபா மட்டுமே வழங்கப்படுகின்றது.
இந்த பணம் தனது தேவைகளை பூர்த்தி செய்ய போதாமல் உள்ளதாகவும், தனக்கு மாதாந்தம் 5000 ரூபாவாவது தர ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை குறித்த வயதான பாட்டி போல் மலையகத்தில் குறைந்த கூலிக்கு பல முதிவர்கள் வேலை செய்து இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



