பிபில பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பிபில வெகல பிரதேசத்தில் வனாந்தர நிலமொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் நேற்று (10.09) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ஊரணிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும், பணத் தகராறு காரணமாக அதே பகுதியில் வசிக்கும் மற்றுமொருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே குறித்த நபர் இரும்பு கம்பியால் தாக்கி கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.