மாலியில் உள்ள தூதரகத்தை மூட நோர்வே திட்டம்!
#world_news
#Lanka4
#Norway
Dhushanthini K
2 years ago

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாலியின் தலைநகரான பமாகோவில் உள்ள தனது தூதரகத்தை மூடவுள்ளதாக நோர்வே அறிவித்துள்ளது.
நோர்வேயின் வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, பாதுகாப்புக் காரணங்களுக்காக பமாகோவில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாலியில் உள்ள ஊழியர்கள் யாரும் தங்கள் பாதுகாப்பு தொடர்பான எந்த கவலையையும் எதிர்கொள்ளக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



