போட்டியை இலக்காகக் கொண்ட புதிய சந்தைகளை கண்டுபிடிப்பதே நோக்கம் - ரணில்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
Dhushanthini K
1 year ago

தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் பாதையை பின்பற்றி போட்டியை இலக்காகக் கொண்ட புதிய சந்தைகளை கண்டுபிடிப்பதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிலையான அபிவிருத்தி சபை மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதன் மூலம் பொருளாதாரத்தை சீர்திருத்த முடியும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.



