தடுப்பூசி செலுத்தியதன் பின் உயிரிழந்த நோயாளியின் உடல் பாகங்களை வெளிநாட்டுக்கு அனுப்ப தீர்மானம்

#SriLanka #Keheliya Rambukwella #Hospital #Lanka4
Kanimoli
1 year ago
தடுப்பூசி செலுத்தியதன் பின் உயிரிழந்த நோயாளியின் உடல் பாகங்களை வெளிநாட்டுக்கு அனுப்ப தீர்மானம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் Co-amoxiclav எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியை செலுத்தியதன் பின்னர் உயிரிழந்த நோயாளியின் இரத்த மாதிரிகள் மற்றும் உடல் பாகங்களை பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சில் நேற்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்தக ஒழுங்குமுறை அமைப்பின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடலில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 50 வயதுடைய இந்த நோயாளி வெட்டுக்காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, Co-amoxiclav என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியை செலுத்திய பின்னர் அவர் இறந்தார், பின்னர் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அது தொடர்புடைய ஆண்டிபயாடிக் இனது உபயோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!