ரோஹித ராஜபக்ஷவினால் ஏவப்பட்ட செய்மதிக்கான செலவை தனியார் நிறுவனமே செலுத்தியது!

#SriLanka #Namal Rajapaksha #Rohitha Rajapaksa #Lanka4
Dhushanthini K
1 year ago
ரோஹித ராஜபக்ஷவினால் ஏவப்பட்ட செய்மதிக்கான செலவை தனியார் நிறுவனமே செலுத்தியது!

ரோஹித ராஜபக்ஷவினால் கடந்த காலங்களில் ஏவப்பட்ட செய்மதிக்கான செலவு தனியார் நிறுவனத்தினால் செலுத்தப்பட்டதாக  நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். 

பண்டாரகமவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் தொகுதியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ சந்திரனுக்கு இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலத்தின் விலை 75 மில்லியன் டொலர் எனவும், இலங்கையில் இருந்து ஏவப்பட்ட செய்மதிக்கு 320 மில்லியன் டொலர் செலவாகும் எனவும் சஜித் பிரேமதாச  பாராளுமன்றத்தில் கூறியமை தொடர்பில் பதிலளித்தார். இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும் தெரிவித்த அவர்,  “அரசு நிறுவனமாக இருந்தால் கூட்டுறவுக் குழுவிடம் முன்வைக்க வேண்டும், ஆனால் தனியார் தொழில் நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளை கேள்வி கேட்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இந்த முதலீடு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்  .சஜித் பிரேமதாச வினவ வேண்டுமாயின் அதனை ஆராயலாம் எனவும் அரச முதலீடுகள் இருப்பின் COP குழுவை அழைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளா். 

இந்த அறிக்கைகள் அவதூறுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை என்றும், இதுபோன்ற அவதூறுகளால் பொருளாதாரத்தை வளர்க்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!