எதிர்காலத்தில் புதிய முதலீட்டு வங்கியும் அபிவிருத்தி வங்கியும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் - நாமல்!

#SriLanka #Namal Rajapaksha #Lanka4
Dhushanthini K
1 year ago
எதிர்காலத்தில் புதிய முதலீட்டு வங்கியும் அபிவிருத்தி வங்கியும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் - நாமல்!

எதிர்காலத்தில் புதிய முதலீட்டு வங்கியும் அபிவிருத்தி வங்கியும் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொரளை தேர்தல் தொகுதியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ நாம் உலகில் முன்னேற விரும்புகிறோம், அதற்காக வணிகர்களைப் பாதுகாக்க வேண்டும். 

குறிப்பாக பெரிய அளவிலான வணிகர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 

அரசாங்கமும் பங்குகளை வைத்திருக்கும் தனியார் துறையுடன் இணைந்து முதலீட்டு வங்கி மற்றும் அபிவிருத்தி வங்கி ஒன்றை நிறுவுவதற்கு நான் முன்மொழிகிறேன். 

அபிவிருத்தி வங்கியின் ஊடாக, நாட்டின் அபிவிருத்தியை மையமாகக் கொண்ட முதலீடுகளுக்கு நடுத்தர மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கக்கூடிய முதலீட்டு வங்கியை நிறுவவும், முதலீட்டு வங்கியின் மூலம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், தேவையான தொலைநோக்கு பார்வையை வழங்கவும் நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!