வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் 706 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை ஒப்புதல் இல்லை: பவித்ரா

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் 738 வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 32 இடங்களுக்கு மாத்திரமே அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி, 20 தள பாதுகாப்பு பணியிடங்கள் மற்றும் 12 வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் பணியிடங்கள் வரையறுக்கப்பட்ட ஆட்சேர்ப்பு அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
தற்போது 164 வனவிலங்கு தள பாதுகாப்பு பணியிடங்களும், 123 வனவிலங்கு தள உதவியாளர் பணியிடங்களும், 451 வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டு வருமானம் 186 கோடி ரூபாவை (1,864 மில்லியன் ரூபா) தாண்டியுள்ளதாகவும், 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அந்த மிருகக்காட்சிசாலைகளிலிருந்து பெறப்பட்ட வருமானம் 161 கோடி ரூபாவை (1,612 மில்லியன் ரூபா) தாண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை 1,197,254 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் 71,344 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.



