கொழும்பு வைத்தியசாலையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டவர் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
Dhushanthini K
1 year ago

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நபரொருவர் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து வழங்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்த விசாரணைகள் இன்று (27.08) முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஒவ்வாமைக் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில், விசாரணைகள் நடைபெற்று முடிவு வரும்வரை குறித்த நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்தை வழங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



