தங்கோவிட்ட பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
#SriLanka
#Accident
#Lanka4
Dhushanthini K
1 year ago

தங்கோவிட்ட, கம்புரதெனிய பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (26.08) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கியும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணித்த இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



