அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!
#SriLanka
#money
Mayoorikka
1 year ago

அஸ்வெசும பபயனாளர்களுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து பிரசசி;னைகளுக்கும் தீர்வு காணப்படும் எனவும், அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜி. விஜேரத்ன இராஜினாமா செய்ததால், கொடுப்பணவு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சலுகைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.



