இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை!

அமைச்சரவை அமைச்சர்கள் அரச அமைச்சர்களுக்கு அதிகாரம் மற்றும் நிறுவனங்களை வழங்காமையால் அரசாங்கத்திற்குள் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.
இதற்கிணங்க இராஜாங்க அமைச்சர்கள் வர்த்தமானியில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.
சுமார் 22 இராஜாங்க அமைச்சர்கள் அண்மையில் இராஜாங்க அமைச்சர் அலுவலகத்தில் ஒன்று கூடி இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களின் விவகாரங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், அந்த நோக்கங்களை வர்த்தமானியில் வெளியிட தேவையில்லை என ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வர்த்தமானியை வெளியிட்டு தனியான அமைச்சுச் செயலாளரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என ஏனைய அரச அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.



