இளம் பெண்ணை கொலை செய்த சந்தேக நபரை பிடிக்க மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது

#SriLanka #Murder #Crime
Prathees
1 year ago
இளம் பெண்ணை கொலை செய்த சந்தேக நபரை பிடிக்க மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது

பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் இளம் பெண்ணை கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

 திருமணத்துக்குப் புறம்பான உறவு காரணமாக ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

 அடம்பிட்டிய கல்த்யவசம் பலால அசோகா தங்குமிடத்தில் வசித்து வந்த சஞ்சீவனி துஷாரிகா டி சில்வா என்ற நாற்பது வயதுடைய பெண் ஹோட்டல் அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 கடந்த 23ஆம் திகதி மாலை களனி கொனவல பிரதேசத்தைச் சேர்ந்த ஐம்பது வயதுடைய நபர் ஒருவர் இந்த விடுதிக்கு வந்து ஹோட்டல் அறையொன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

 பின்னர் கடந்த 24ம் திகதி மாலை சுமார் 4:30 மணியளவில் இந்த அறையில் இருந்தவர் தனது அடையாள அட்டையை ஹோட்டலில் வைத்துவிட்டு சென்றார். பின்னர் ஹோட்டல் ஊழியர்கள் அறையை சோதனையிட்ட போது பெண் இறந்து கிடப்பதை கண்டு பண்டாரவளை பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

 இந்த பெண்ணுடன் இருந்த நபர் கடிதம் மற்றும் பல்வேறு குறிப்புகளை சுவர்களில் எழுதி இந்த பெண்ணை கொன்றுவிட்டு, அவரும் விஷம் குடித்து குளியலறை முழுவதும் வாந்தி எடுத்து விட்டு சென்றுள்ளார்.

 காதல் விவகாரம் காரணமாக பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

 உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை பண்டாரவளை நீதவான் கே. திருமதி ஜீவ்ராணி அவர்களால் நேற்று முன்தினம் (24) இரவு நடாத்தப்பட்டது.

 பண்டாரவளை உத்தியோகபூர்வ நாய்ப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேக நபர் பிரதான பஸ் நிலையம் ஊடாக புகையிரத நிலையத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

 பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் பி. எம். எம். தசநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம், பண்டாரவளை தலைமையக பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த குமாரசிறியின் மேற்பார்வையில் பண்டாரவளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!