குடிநீர் தேவையை அவசர சேவையாக கருத தீர்மானம்!
#SriLanka
#water
#Lanka4
Thamilini
2 years ago
குடிநீரின் தேவையை அவசர சேவையாக கருதுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, அவசர நடவடிக்கை குழுவின் ஊடாக கூட்டு விரைவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளததாகவும் அவர் கூறியுள்ளார்.
நீர் வழங்கல், நீர்ப்பாசனம், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
மேற்படி மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, அது தொடர்பான அனைத்து நிறுவனங்களும் இதில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.