கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கையிடம் கையளித்த இந்தியா!
#India
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
டோனியர் 228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்தியா உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் ஒப்படைத்துள்ளது.
கார்டோனாவில் இன்று (16.08) இடம்பெற்ற வைபவத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிடம் இது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கையின் முன்னர் பயன்படுத்தப்பட்ட டோனியர் விமானம் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அது திரும்பி வரும் வரை, இந்த புதிய விமானம் இலங்கை விமானப்படையின் பாவனைக்கு பயன்படுத்தப்பட உள்ளது.