சிறப்பாக இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்திருவிழா!
#SriLanka
Mayoorikka
2 years ago
வரலாற்று புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்திருவிழா இன்று நடைபெற்றது.
காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணியளவில் கந்தன், வள்ளி தெய்வயானையுடன் அலங்கார திருத்தேரில் ஏறி வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர்திருவிழாவில், பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டதுடன், அடியார்கள் பலர் தமது நேரத்திக்கடன்களையும் நிறைவுசெய்தனர்.
நாளைய தினம், ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

