பிரான்ஸில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரி!
#Police
#France
#Suicide
#Lanka4
#பொலிஸ்
#City
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
2 years ago
Fontenay-sous-Bois (Val-de-Marne) நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புதன்கிழமை காலை இச்சம்பசம் இடம்பெற்றது. மேற்படி காவல்நிலையத்தில் பணியும் அதே நகரில் வசிக்கும் 37 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இரண்டு இளம் பிள்ளைகளின் தந்தையான அவர், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி அளவில் சடலம் அவரது மகிழுந்துக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.