பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உறுதி பூண்ட ஜனாதிபதி!
இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவிற்கு உயர்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட வந்த கண்டி உயர் பெண்கள் கல்லூரி மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையின் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இலங்கை பாராளுமன்றம், துறைமுக நகரம் கொழும்பு, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் அவர்களும் ஜனாதிபதியுடன்
இணைந்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தின் வரலாறு மற்றும் இலங்கையின் ஆட்சியில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் இடமாக அதன் கட்டமைப்பு மற்றும் பாத்திரம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.