மெக்சிகோவில் பஸ் மற்றும் ரயில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி
#Death
#Accident
#Bus
#Mexico
#Train
Prasu
2 years ago
மெக்சிகோவின் குரேடாரே மாகாணம் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரெயில்வே கிராசிங்கை பயணிகள் பஸ் ஒன்று கடந்தபோது ரெயில் மோதியது.
இதில் அந்த பஸ், ரெயிலில் சிக்கி தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மெக்சிகோவில் ரெயில் சிக்னல்கள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே