சினோபெக் நிறுவனத்தின் 02ஆவது எரிபொருள் கையிருப்பு இன்று இலங்கையை வந்தடையும்!
சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் கையிருப்பு இன்று (02) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
சினோபெக் எரிபொருளின் முதல் தொகுதி அண்மையில் இலங்கையை வந்தடைந்தாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எரிவாயு நிலைய விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சினோபெக் நிறுவனம் நாடு முழுவதும் 150 எரிவாயு நிலையங்களுடன் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் கூற்றுப்படி, சினோபெக் நேரடியாக அந்நிய செலாவணியை செலவழித்து எரிபொருள் இருப்புக்களை இலங்கைக்கு கொண்டுவருகிறது.
இதனால் இலங்கையிலுள்ள உள்ளுர் நிதி நிறுவனங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது எனவும், 12 மாத நிதி வசதிகளுடன் இந்த எரிபொருள் இருப்புக்களை இலங்கைக்கு கொண்டுவர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.