நாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட பயணம் ஒருபோதும் நிற்காது - சாகர!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
வீடுகளுக்கு தீ வைத்தாலும், தாக்கினாலும் நாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட பயணம் நிற்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
களுத்துறை தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டுக்காகவும் தேசிய பாதுகாப்பிற்காகவும் பொதுஜன பெரமுன இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.