தபால் திணைக்களத்தின் 42 வாகனங்களைக் காணவில்லை

#SriLanka
Prathees
2 years ago
தபால் திணைக்களத்தின் 42 வாகனங்களைக் காணவில்லை

போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என்று தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

 தபால் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த வாகனங்கள் இல்லாதது தெரியவந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் எமது தபால் மா அதிபர்.ருவன் சத்குமார குறிப்பிடுகையில், 

 இந்த வாகனங்கள் 30 முதல் 50 வருடங்கள் பழமையானவை. இந்த வாகனங்கள் பற்றிய தகவல்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு பதிவேட்டில் உள்ளதாகவும், ஆனால் தபால் திணைக்களத்தின் சரக்கு பட்டியலில் இல்லை எனவும் தெரிவித்த தபால் மா அதிபர், அந்த வாகனங்கள் நாட்டில் எங்கும் இயங்கினால் அல்லது யாருக்கேனும் கிடைத்தால் அவர்களுக்கான வருவாய் உரிமம், அது குறித்த தகவல்களை உடனடியாக அளிக்குமாறு துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் இதுவரை தகவல் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த சத்குமார, வாகனங்கள் பற்றிய தகவல்கள் இல்லை என்றால், அவற்றை தரவு அமைப்பிலிருந்து நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 இதேவேளைஇ தபால் திணைக்களத்தின் பஸ் இலக்கம் 60 ஸ்ரீ 7256 பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 இது தொடர்பில் எமது தபால் மா அதிபர் ருவன் சத்குமாரவிடம் கேட்டபோதுஇ ​​முத்திரைப் பணியகத்தின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இந்த பேருந்தை அனுப்புவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!