ஜனாதிபதி மக்களின் நன்மதிப்பை பெறவில்லை - சரத் பொன்சேக்கா!
#SriLanka
#Ranil wickremesinghe
#Sarath Fonseka
#Lanka4
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளதாக தாம் நினைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமக்கு ஆதரவாக சிலர் உள்ளனர் எனவும் சிறிது அந்நிய செலாவணி சம்பாதிக்கக்கூடியவர்கள் அல்லது மோசடியை நடத்தக்கூடியவர்கள் நாடு இப்போது ஸ்திரமாக இருப்பதாகவும், தற்போதைய ஜனாதிபதி நாட்டை சரியான திசையில் கொண்டு செல்கிறார் என்றும் நினைக்கிறார்கள், என்றும் கூறினார்.
ஆனால் உண்மையில் அந்த விடயங்கள் நடக்காது என தாம் கருதுவதாகவும், எதிர்க்கட்சிகள் தகுதியற்ற ஒருவரை முன்னிறுத்தினால், தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவெற்றி பெறுவார். அது தேர்தலில் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை பொறுத்தே அமையும்," எனவும் அவர் கூறினார்.