புலத்சிங்களவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் காயம்
#SriLanka
#Accident
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
56 minutes ago
புலத்சிங்கள – உடுகலகந்த பகுதியில் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (07) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த 14 பேரில் 12 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேனின் பிரேக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே