ராஜஸ்தானில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து
#Accident
#Hospital
#people
#2023
#fire
#Tamilnews
#Rajasthan
Mani
2 years ago

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று நேற்று இரவு குழந்தைகள் தங்கியிருந்த இரண்டு வார்டுகளில் இருந்து புகை வெளியேறியது.இதனைக் கவனித்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அந்த வார்டுகளில் இருந்த 30 குழந்தைகளையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றினர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
குழந்தைகள் இருந்த வார்டு சமீபத்தில் கட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டு தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கைலாஷ் மீனா தெரிவித்தார். இந்த சம்பவத்தின் போது உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



