சுவீடனில் பைபிளை எரிக்க அரசாங்கம் அனுமதி

#world_news
சுவீடனில் பைபிளை எரிக்க அரசாங்கம் அனுமதி

சுவீடனில் இஸ்ரேலிய துாதரகத்திற்கு வெளியே பைபிளை எரிக்க அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது,

இன்று இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பைபிளை எரிப்பதற்கு அனுமதிகோரிய நபர் ஒருவருக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுவீடனின் தேசிய வானொலி தெரிவித்துள்ளது.

 சுவீடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூதகாங்கிரஸ் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

 இதுபோன்ற ஆத்திரமூட்டும் இனவெறி மதவெறி நடவடிக்கைகளிற்கு எந்த நாகரீக சமூகத்திலும் இடமில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களின் ஆழமான மத மற்றும் கலாச்சார உணர்வுகளின் மீது ஏறிமிதிப்பது சிறுபான்மையினர் விரும்பத்தகாதவர்கள் மதிக்கப்படாதவர்கள் என்ற தெளிவான செய்தியை தெரிவிக்கின்றது எனயூத அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஜனாதிபதி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சுவீடனில் அண்மையில் ஒரு நபர் மசூதிக்கு முன்னபா குர்ஆனை எரித்ததால் வன்முறைகள் தொடர்ந்தன.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4