தென்கொரியாவில் வெள்ள அபாயம் : ஏழுபேர் உயிரிழப்பு!
#world_news
#Lanka4
#SouthKorea
Thamilini
2 years ago
தென் கொரியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூவரை காணவில்லை எனவும் அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும், 1,567 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், சுங்சியோங் மாகாணத்தில் வெள்ளப்பாதிப்பு மேலும் உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சில புல்லட் ரயில்களின் சேவை தற்காலிகமகா நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சில ரயில்கள் மெதுவாக செயற்படுவதானல் தாமதம் ஏற்படலாம் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.