மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் இளைஞர்கள் இருவர் பலி
அராலி வீதி, கலுண்டை சந்தி, மானிப்பாய் பொலிஸ் களத்தில் அராயிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த NP BCW 5842 இலக்கம் கொண்ட அப்பாச்சி மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணத்திலிருந்து அராலி நோக்கிப் பயணித்த NP BGR 5694 இலக்கம் கொண்ட பிளேஸர் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
NP BCW 5842 இலக்க மோட்டார் சைக்கிளில் பயணித்த அராலி மத்தி வட்டுக்கோட்டை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) என்பவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த மகேஸ்வரன் மயுரன் (வயது 37) என்பவரும் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , 37 வயதான மகேஸ்வரன் மயூரன் என்பவரும் அராலி மத்தியைச் சேர்ந்த 29 வயதான ஜெயசுந்தரம் சரோஜன் என்பவரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
