நினைத்த காரியம் நடக்க இந்த மந்திரத்தை காலையில் சொல்லுங்கள்

#spiritual #Lanka4 #ஆன்மீகம் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
நினைத்த காரியம் நடக்க இந்த மந்திரத்தை காலையில் சொல்லுங்கள்

நம்முடைய கர்ம வினைகள் காரணமாகவோ அல்லது பிறருடைய கெட்ட எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றாலோ நாம் நினைத்த காரியங்கள் பல முறை முயற்சி எடுத்த போதிலும் தள்ளி போய் கொண்டிருக்கும்.

 அப்படி நியாயமாக நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டால் இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

 எத்தனை நாட்களுக்குள் நடக்க வேண்டும் என சொல்லியே பிரார்த்தனையை முன்வைத்து பரகாரத்தை செய்ய துவங்கலாம். நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும். அதுவும் உடனடியாக நடக்க வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் இல்லாதவர்கள் இருக்க முடியாது.

 ஆனால் எப்போதாவது அரிதாக, ஏதாவது ஒரு காரியம் தான் அதிசயம் நிகழ்வது போல் நாம் நினைத்தபடி அந்த காரியம் அப்படியே நடக்கும். அதற்கு மாறாக பெரும்பாலான விஷயங்கள் நாம் எவ்வளவு போராடினாலும் நடக்காமல் போகும். அப்படி நினைத்த காரியம் உடனடியாக நடக்க சில எளிய பரிகாரத்தை வீட்டிலேயே செய்தால் போதும்.

 இந்த பரிகாரத்தை செய்வதற்கு குளிக்க வேண்டும், விரதம் இருக்க வேண்டும், விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

 நாம் நினைத்த காரியம் நாளைக்குள் நடக்க வேண்டும், இரண்டு நாட்களுக்குள் நடக்க வேண்டும், ஒரு வாரத்திற்குள் நடக்க வேண்டும் என்று கூட வேண்டிக் கொண்டி, இந்த பரிகாரத்தை செய்யலாம். 

நம்முடைய வேண்டுதல் நிறைவேறிய பிறகு அடுத்த வேண்டுதலை முன்வைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.

தினமும் காலையில் எழுந்து முகத்தை கழுவி விட்டு வாராஹி அம்மனுக்குரிய எளிமையான, அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரத்தை மட்டும் 9 முறை சொன்னால் போதும். பிரம்ம முகூர்த்த வேளையான காலை 04.30 மணி முதல் 05.30 மணிக்குள் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

 முதுகு நேராக இருக்கும் படி அமர்ந்து, தொடை மீது இரு கைகளையும் சமாதான நிலையில் வைத்து, கண்களை மூடி அமர்ந்து, அமைதியான மனதுடன் இதை சொல்ல வேண்டும்.

 " ஓம் ஸ்ரீம் வம் ஸ்ரீம் ஓம் " மந்திரம் சொல்லும் முறை :

 இந்த மந்திரத்தை ஒன்பது முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது வெறும் வயிற்றில் தான் சொல்ல வேண்டும். சிலருக்கும் காலையில் எழுந்து பல் துலக்கியதும் தண்ணீர் குடிக்கும் பழக்கும், டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். 

ஆனால் இந்த மந்திரத்தை சொல்லும் போது எதுவும் சாப்பிடக் கூடாது. இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் மட்டுமே சொல்ல வேண்டும். மற்ற நேரங்களில் சொல்லக் கூடாது.

வேண்டுதல் நிறைவேறிய பிறகு இந்த மந்திர உச்சரிப்பை நிறுத்தி விட்டு, மீண்டும் தேவைப்படும் போது மீண்டும் மந்திரத்தை சொல்லலாம். தினமும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தாலும் நன்மையை தரும். இந்த மந்திரத்தை சொல்லும் நாட்களில் அசைவம் சாப்பிடலாம். அப்படி சாப்பிடும் நாட்களில் மறுநாள் காலை தலைக்கு குளித்து விட்டு, பிறகு மந்திரத்தை சொல்ல வேண்டும்.