சிங்கள மக்களின் உணர்வுகளை தூண்டவே குருந்தூர் மலைக்கு வந்த உதய கம்மன்பில! சிறிதரன்
#SriLanka
Mayoorikka
2 years ago
சிங்கள மக்களின் உணர்வுகளை தூண்டும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் குருந்தூர் மலை பயணம் அமைந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள விட்டுக்கொடுப்புடன் தயாராகவுள்ள நிலையில், சிங்கள இனவாதமும், பௌத்தவாதமும் பேரினவாத சிந்தனையோடு தொடர்ச்சியாக செயல்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்