பொரளை பகுதியில் துப்பாக்கிச் சூடு
PriyaRam
2 years ago
கொழும்பு - பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இன்று (22) காலையில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி வீட்டின் வாசலில் இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீடு பிரபல பாதணிகள் நிறுவனமொன்றின் நிர்வாக பணிப்பாளர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது. எனினும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.