குருந்தூர் மலை திரிய விகாரை விவகாரம்: அமைச்சினால் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்
முல்லைத்தீவு குருந்தூர் மலை மற்றும் திருகோணமலை திரிய விகாரை தொடர்பில் எந்த தரப்பினர் கருத்து தெரிவித்தாலும் அமைச்சினால் தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு அந்தஸ்திலும் உள்ள ஒருவருக்கு அதை மாற்றும் திறன் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கும் திருகோணமலை திரியாய் விகாரைக்கும் தொல்பொருள் தேவைகளுக்காக 5000 ஏக்கர் காணி உரிமை கோரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் 2000 ஏக்கர் நிலப்பரப்பும், திருகோணமலை திரியாய விகாரைக்கு என 3000 ஏக்கர் நிரப்பரப்பையும் தொல்பொருள் தினைக்களம் கோரியுள்ளது.
வனவளத் திணைக்களம், காணி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான இவ்வளவு பெரிய காணியை தொல்லியல் காணி எனக் கூறுவதன் அடிப்படை என்ன என்பதை உடனடியாகக் கண்டறிய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் முலத்தீவு குருந்தி விகாரைக்கும் திருகோணமலை திரியாய விகாரைக்கும் இவ்வளவு நிலம் தேவையா?
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடியின் பின்னணியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதா?
கிழக்கு தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட படையும் அண்மையில் கலைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.